பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
207

66

66. மெய்யே யிவற்கில்லை வேட்டையின்
        மேன்மன மீட்டிவளும்
   பொய்யே புனத்தினை காப்ப
        திறைபுலி யூரனையாள்

   மையேர் குவளைக்கண் வண்டினம்
        வாழுஞ்செந் தாமரைவாய்
   எய்யே மெனினுங் குடைந்தின்பத்
        தேனுண் டெழிறருமே.