பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
210

67

67. மைவார் கருங்கண்ணி செங்கரங்
        கூப்பு மறந்துமற்றப்
   பொய்வா னவரிற் புகாதுதன்
        பொற்கழற் கேயடியேன்
   உய்வான் புகவொளிர் தில்லைநின்
        றோன்சடை மேலதொத்துச்
   செவ்வா னடைந்த பசுங்கதிர்
      வெள்ளைச் சிறு பிறைக்கே.