பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
222

76

76. கழிகின்ற வென்னையும் நின்றநின்
        கார்மயில் தன்னையும்யான்
   கிழியொன்ற நாடி யெழுதிக்கைக்
        கொண்டென் பிறவிகெட்டின்
   றழிகின்ற தாக்கிய தாளம்
        பலவன் கயிலையந்தேன்
   பொழிகின்ற சாரல்நுஞ் சீறூர்த்
        தெருவிடைப் போதுவனே.