பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
136

8

8. சொற்பாலமுதிவள் யான்சுவை
      யென்னத் துணிந்திங்ஙனே
  நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று
      நானிவ ளாம்பகுதிப்
  பொற்பா ரறிவார் புலியூர்ப்
      புனிதன் பொதியில்வெற்பிற்
  கற்பா வியவரை வாய்க்கடி
      தோட்ட களவகத்தே.