பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
233

84

84. நீகண் டனையெனின் வாழலை
        நேரிழை யம்பலத்தான்
   சேய்கண்டனையன்சென் றாங்கோ
        ரலவன்றன் சீர்ப்பெடையின்
   வாய்வண் டனையதொர் நாவற்
        கனிநனி நல்கக்கண்டு
   பேய்கண் டனையதொன் றாகிநின்
        றானப் பெருந்தகையே.