பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
236

86

86. புரங்கடந் தானடி காண்பான்
        புவிவிண்டு புக்கறியா
   திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன்
        னீரடிக் கென்னிரண்டு

கரங்கடந் தானொன்று காட்டமற்
        றாங்கதுங் காட்டிடென்று
   வரங்கிடந் தான்தில்லை யம்பல
முன்றிலம் மாயவனே.