பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
238

87

87. உள்ளப் படுவன வுள்ளி
        யுரைத்தக் கவர்க்குரைத்து
   மெள்ளப் படிறு துணிதுணி
        யேலிது வேண்டுவல்யான்
   கள்ளப் படிறர்க் கருளா
        அரன்தில்லை காணலர்போற்
   கொள்ளப் படாது மறப்ப
        தறிவிலென் கூற்றுக்களே.