பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
239

88

88. மேவியந் தோலுடுக் குந்தில்லை
        யான்பொடி மெய்யிற்கையில்
   ஓவியந் தோன்றுங் கிழிநின்
        னெழிலென் றுரையுளதால்
   தூவியந் தோகையன் னாயென்ன
        பாவஞ்சொல் லாடல்செய்யான்
   பாவியந் தோபனை மாமட
        லேறக்கொல் பாவித்ததே.