9. உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச் சிற்றம் பலத்தொருத்தன் குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடைதோள் புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய் மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே.