பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
243

90

90. தேமென் கிளவிதன் பங்கத்
        திறையுறை தில்லையன்னீர்
   பூமென் தழையுமம் போதுங்கொள்
        ளீர்தமி யேன்புலம்ப
   ஆமென்றருங்கொடும் பாடுகள்
        செய்துநுங் கண்மலராங்
   காமன் கணைகொண் டலைகொள்ள
        வோமுற்றக் கற்றதுவே.