பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
246

93

93. யாழார் மொழிமங்கை பங்கத்
        திறைவன் எறிதிரைநீர்
   ஏழா யெழுபொழி லாயிருந்
        தோன்நின்ற தில்லையன்ன
   சூழார் குழலெழிற் றொண்டைச்செவ்
        வாய்நவ்வி சொல்லறிந்தால்
   தாழா தெதிர்வந்து கோடுஞ்
        சிலம்ப தருந்தழையே.