பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
251

97

97. கற்றில கண்டன்னம் மென்னடை
        கண்மலர் நோக்கருளப்
   பெற்றில மென்பிணை பேச்சுப்
        பெறாகிள்ளை பிள்ளையின்றொன்

   றுற்றில ளுற்ற தறிந்தில
        ளாகத் தொளிமிளிரும்
   புற்றில வாளர வன்புலி
        யூரன்ன பூங்கொடியே.