தொடக்கம் |
|
|
1 | வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின் ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. |
|
உரை
|
|
|
|
|
2 | வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் வேதன் உரைத்தானும் மெய்ப் பொருள் காட்டவே. |
|
உரை
|
|
|
|
|
3 | இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே உருக்கு உணர் வாய் உணர் வேதத்துள் ஓங்கி வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும் கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | இருக்கில் இருக்கும் எண் இலி கோடி அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே. |
|
உரை
|
|
|
|
|
5 | திரு நெறி ஆவது சித்த சித்து அன்றிப் பெரு நெறி ஆய பிரானை நினைந்து குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும் ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக் கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் பேறு அங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
7 | பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர் ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே. |
|
உரை
|
|
|
|