தொடக்கம் |
|
|
1 | ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன் மின் பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன் மின் வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின் காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே. |
|
உரை
|
|
|
|
|
1 | தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர் தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர் தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள் தாம் அறிவார்க்குத் தமர்பரன் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
2 | யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே. |
|
உரை
|
|
|
|
|
3 | அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும் கற்றன போதம் கமழ்பவர் மானிடர் உற்றுநின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில் பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே. |
|
உரை
|
|
|
|
|
4 | அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர் விழித்து இருந்து என் செய்வீர் வெம்மை பரந்து விழக் கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே. |
|
உரை
|
|
|
|
|
5 | தன்னை அறியாது தான் அல என்னாது இங்கு இன்மை அறியாது இளையர் என்று ஓராது வன்மையில் வந்திடும் கூற்றம் வரு முன்னம் தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே. |
|
உரை
|
|
|
|
|
6 | துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் அறிந்தான் அறியும் அளவு அறிவாரே. |
|
உரை
|
|
|
|
|
7 | தான் தவம் செய்வதாம் செய் தவத்து அவ்வழி மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர் காள் ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர் நான் தெய்வம் என்று நமன் வருவானே. |
|
உரை
|
|
|
|
|
8 | திளைக்கும் வினைக் கடல் தீருறு தோணி இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு கிளைக்கும் தனக்கும் அக்கேடு இல் புகழோன் விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே. |
|
உரை
|
|
|
|
|
9 | பற்று அதுவாய் நின்ற பற்றினைப் பார்மிசை அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே. |
|
உரை
|
|
|
|