முதல் தந்திரம்

1. உபதேசம்

1விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
தண் நின்ற தாளைத் தலைக் காவல் முன் வைத்து
உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்தக்
கண் நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.
உரை
   
2களிம்பு அறுத்தான் எங்கள் கண்நுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருள் கண் விழிப் பித்துக்
களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே.
உரை
   
3பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே.
உரை
   
4வேயின் எழும் கனல் போலே இம் மெய் எனும்
கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயா என்னும்
தோயம் அதாய் எழும் சூரியன் ஆமே.
உரை
   
5சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே
சூரிய காந்தம் சூழ் பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
உரை
   
6மலம் களைந்தாம் என மாற்றி அருளித்
தலம் களைந்தான் நல் சதா சிவம் ஆன
புலம் களைந்தான் அப் பொதுவின் உள் நந்தி
நலம் களைந்தான் உள் நயந்தான் அறிந்தே.
உரை
   
7அறி ஐம்புலனுடன் நான்றது ஆகி
நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல
அறிவறி உள்ளே அழிந்தது போலக்
குறி அறிவிப்பான் குருபரன் ஆமே.
உரை
   
8ஆ மேவுபால் நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனி மன்றில் தன்னம் தனி நித்தம்
தீ மேவு பல் கரணங்களுள் உற்றன
தாம் ஏழ்பிறப்பு எரி சார்ந்தவித்தாமே.
உரை
   
9வித்தைக் கெடுத்து வியாக் கிரத்தே மிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கு அற
ஒத்துப் புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே.
உரை
   
10சிவ யோகம் ஆவது சித்த சித்து என்று
தவ யோகத்து உள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகம் சாராது அவன் பதி போக
நவ யோக நந்தி நமக்கு அளித்தானே.
உரை
   
11அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்
அளித்தான் பேர் இன்பத்து அருள் வெளிதானே.
உரை
   
12வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கியவாறும்
ஒளியில் ஒளி போய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.
உரை
   
13சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர
முத்தர் தம் முத்தி முதல் முப்பத்து ஆறே.
உரை
   
14முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்
ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளிபுக்குச்
செப்ப அரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அப்பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே.
உரை
   
15இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி
இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக் காலத்து இயல்பைக் குறித்து அங்கு
இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே.
உரை
   
16சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர் கண்டு ஆரச் சுருதிக் கண்தூக்கமே.
உரை
   
17தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவ போகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே.
உரை
   
18எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வான் ஆதி அரன் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம்.
உரை
   
19மாணிக்கத்து உள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய்
ஆணிப் பொன் மன்றினில் ஆடும் திருக் கூடத்தைப்
பேணித் தொழுது என்ன பேறு பெற்றாரே.
உரை
   
20பெற்றார் உலகில் பிரியாப் பெரு நெறி
பெற்றார் உலகில் பிறவாப் பெரும் பயன்
பெற்றார் அம் மன்றில் பிரியாப் பெரும் பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
உரை
   
21பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல்
அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள் ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே.
உரை
   
22புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தாற் போல்
திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும்
உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்த அசத்தமே.
உரை
   
23சத்தம் முதல் ஐந்தும் தன் வழித் தான் சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறு உண்டோ
சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும்
அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே.
உரை
   
24அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பு எனப் பேர் பெற்று உருச் செய்த அவுரு
அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.
உரை
   
25அடங்கும் பேர் அண்டத்து அணு அண்டம் சென்று அங்கு
இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ
கடம் தொறும் நின்ற உயிர் கரைகாணில்
திடம் பெற நின்றான் திருவடி தானே.
உரை
   
26திருவடியே சிவம் ஆவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல் கதி அது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே.
உரை
   
27தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.
உரை
   
28தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும்
தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்து எம்பிரான் தனைச் சந்தித்தே.
உரை
   
29சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே.
உரை
   
30போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போய் அடைந்தார் விண்ணே.
உரை