முதல் தந்திரம்

3. செல்வம் நிலையாமை

1அருளும் அரசனும் ஆனையும் தேரும்
பொருளும் பிறர் கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரின்
மருளும் பினையவன் மாதவம் அன்றே.
உரை
   
2இயக்கு உறுதிங்கள் இருள் பிழம்பு ஒக்கும்
துயக்கு உறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கு அற நாடுமின் வானவர் கோனைப்
பெயல் கொண்டல் போலப் பெரும் செல்வம் ஆமே.
உரை
   
3தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு
என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்
உன் உயிர் போம் உடல் ஒக்கப் பிறந்தது
கண் அது கண் ஒளி கண்டு கொளீரே.
உரை
   
4ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பு இடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டது வலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
உரை
   
5தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன் மின்
ஆற்றுப் பெருக்கில் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தைக்
கூற்றன் வரும் கால் குதிக்கலும் ஆமே.
உரை
   
6மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர் மிசைச் செல்லும் கலம் போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடு பேறு ஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.
உரை
   
7வாழ்வும் மனைவியும் மக்கள் உடன் பிறந்
தாரும் அளவேது எமக்கு என்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரவு செய்வார் கட்குக்
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே.
உரை
   
8வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது
நாட்டிய தாய் தமர் வந்து வணங்கிப் பின்
காட்டிக் கொடுத்தவர் கை விட்ட வாறே.
உரை
   
9உடம் பொடு உயிரிடை விட்டோடும் போது
அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும்
விடும் பரிசு ஆய்நின்ற மெய்ந் நமன் தூதர்
சுடும் பரிசத்தையும் சூழ்கிலாரே.
உரை