தொடக்கம் |
|
|
முதல் தந்திரம் 4. இளமை நிலையாமை |
1 | கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே விழக் கண்டும் தேறார் விழி இலா மாந்தர் குழக் கன்று மூத்து எருதாய்ச் சில நாளில் விழக் கண்டும் தேறார் வியன் உலகோரே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஆண்டு பலவும் கழிந்தன அப்பனைப் பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடர் அறியாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை முறை ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்து அற்ற கங்கைப் படர் சடை நந்தியை ஓர்ந்து உற்றுக் கொள்ளும் உயிர் உள்ள போதே. |
|
உரை
|
|
|
|
|
4 | விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர் கரும்பு தகர்த்துக் கடைக் கொண்ட நீர் போல் அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்குக் கரும்பு ஒத்துக் காஞ்சிரங் காயும் ஒத்தேனே. |
|
உரை
|
|
|
|
|
5 | பாலன் இளையன் விருத்தன் என நின்ற காலம் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி மேலும் கிடந்து விரும்புவன் யானே. |
|
உரை
|
|
|
|
|
6 | காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும் சாலும் அவ் ஈசன் சலவியன் ஆகிலும் ஏல நினைப்பவர்க்கு இன்பம் செய்தானே. |
|
உரை
|
|
|
|
|
8 | கண்ணதும் காய் கதி ரோனும் உலகினை உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் விண் உறுவாரையும் வினை உறுவாரையும் எண் உறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே. |
|
உரை
|
|
|
|
|
9 | எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்துமின் எய்திய நாளில் எறிவது அறியாமல் எய்திய நாளில் இருந்து கண்டேனே. |
|
உரை
|
|
|
|