முதல் தந்திரம்

5. உயிர் நிலையாமை

1தழைக் கின்ற செம் தளிர்த் தண் மலர்க் கொம்பில்
இழைக் கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போது அறியார் அவர் தாமே.
உரை
   
2ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச் செய்யைக் காத்து வருவார்கள்
ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச் செய்யைக் காவல் விட்டாரே.
உரை
   
3மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள
அத்துள்ளே வாழும் அரசரும் அஞ்சு உள்ள
அத்துள்ளே வாழும் அரசனும் அங்கு உளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே.
உரை
   
4வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகு அறியாதவர்
தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே.
உரை
   
5சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன்
அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர்
நின்று உணரார் இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே.
உரை
   
6மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தார் இலை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவது
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே.
உரை
   
7துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பு இடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி
அடுத்து எரியாமல் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே.
உரை
   
8இன்புறு வண்டு இங்கு இனமலர் மேல் போய்
உண்பது வாச மது போல் உயிர் நிலை
இன்பு உற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி
கண்புற நின்ற கருத்துள் நில்லானே.
உரை
   
9ஆம் விதி நாடி அறம் செய்மின் அந்நிலம்
போம் விதி நாடிப் புனிதனைப் போற்று மின்
நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர்
ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே.
உரை
   
10அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்
வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும் போது ஒரு
தவ்விக் கொடு உண்மின் தலைப் பட்ட போதே.
உரை