முதல் தந்திரம்

11. அன்புடைமை

1அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.
உரை
   
2பொன்னைக் கடந்து இலங்கும் புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம் பிறை
துன்னிக் கிடந்த சுடு பொடி ஆடிக்குப்
பின்னிக் கிடந்தது என் பேர் அன்பு தானே.
உரை
   
3என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டுப்
பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என் போல் மணியினை எய்த ஒண்ணாதே.
உரை
   
4ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி
பாரம் உடையவர் காண்பார் பவம் தன்னைக்
கோர நெறிகொடு கொங்கு புக்காரே.
உரை
   
5என் அன்பு உருக்கி இறைவனை ஏத்துமின்
முன் அன்பு உருக்கி முதல்வனை நாடுமின்
பின் அன்பு உருக்கி பெரும் தகை நந்தியும்
தன் அன்பு எனக்கே தலை நின்ற வாறே.
உரை
   
6தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும்
வான் ஒரு காலம் வழித்துணை ஆய் நிற்கும்
தேன் ஒரு பால் திகழ் கொன்றை அணி சிவன்
தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே.
உரை
   
7முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை
அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார்
வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகல் இடத் தானே.
உரை
   
8கருத்து உறு செம் பொன் செய் காய் கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.
உரை
   
9நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இச்சை உளே வைப்பர் எந்தைபிரான் என்று
நச்சியே அண்ணலை நாடு கிலாரே.
உரை
   
10அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான்
முன் பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன்
அன்பின் உள் ஆகி அமரும் அரும் பொருள்
அன்பின் உள்ளார்க்கே அணை துணை ஆமே.
உரை