முதல் தந்திரம்

12. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

1இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து அருள் கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே.
உரை
   
2இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில் பல என்னினும்
அன்பில் கலவி செய்து ஆதிப் பிரான் வைத்த
முன்பு இப் பிறவி முடிவது தானே.
உரை
   
3அன்பு உறு சிந்தையின் மேல் எழும் அவ் ஒளி
இன்பு உறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்பு உறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று
நண்பு உறு சிந்தையை நாடுமின் நீரே.
உரை
   
4புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அது இது ஆமே.
உரை
   
5உற்று நின்றாரொடு அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை
பத்திமையாலே பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே.
உரை
   
6கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி
கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை
கண்டேன் கமல மலர் உறைவான் அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே.
உரை
   
7நம்பனை நானா விதப் பொருள் ஆகும் என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்து இடை நின்று இரதிக்கும்
அன்பனை யாரும் அறிய கிலாரே.
உரை
   
8முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான் நந்தி
அன்பில் அவனை அறிய கிலாரே.
உரை
   
9ஈசன் அறியும் இராப் பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களைத்
தேசு உற்று அறிந்து செயல் அற்று இருந்திடில்
ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே.
உரை
   
10விட்டுப் பிடிப்பது என் மே தகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.
உரை