தொடக்கம் |
|
|
முதல் தந்திரம் 16. நடுவு நிலைமை |
1 | நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர் நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே. |
|
உரை
|
|
|
|
|
2 | நடுவு நின்றான் நல்ல கார் முகில் வண்ணன் நடுவு நின்றான் நல்ல நால் மறை ஓதி நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவோர் நடுவு நின்றார் நல்ல நம்பனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
3 | நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர் நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர் நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர் நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே. |
|
உரை
|
|
|
|
|
4 | தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி மூன்று நின்றார் முதல்வன் திரு நாமத்தை நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே. |
|
உரை
|
|
|
|