தொடக்கம் |
|
|
இரண்டாம் தந்திரம் 4. தக்கன் வேள்வி |
1 | தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறை கெட்டுச் சிந்தினர் அண்ணல் சினம் செய்த போதே. |
|
உரை
|
|
|
|
|
2 | சந்தி செயக் கண்டு எழுகின்ற அரிதானும் எந்தை இவன் அல்ல யாமே உலகினில் பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம் செய்ய அந்தம் இலானும் அருள் புரிந்தானே. |
|
உரை
|
|
|
|
|
3 | அப்பரிசே அயனார் பதி வேள்வியுள் அப்பரிசே அங்கி அதிசயம் ஆகிலும் அப்பரிசே அது நீர்மையை உள் கலந்து அப்பரிசே சிவன் ஆலிக் கின்றானே. |
|
உரை
|
|
|
|
|
4 | அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள் அப்பரிசே அவர் ஆகிய காரணம் அப்பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு அப்பரிசு ஆகி அலர்ந்து இருந்தானே. |
|
உரை
|
|
|
|
|
5 | அலர்ந்து இருந்தான் என்று அமரர் துதிப்பக் குலம்தரும் கீழ் அங்கி கோள் உற நோக்கிச் சிவந்த பரம் இது சென்று கதுவ உவந்த பெருவழி ஓடி வந்தானே. |
|
உரை
|
|
|
|
|
6 | அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே வருமதி வாலை வன்னி நல் இந்திரன் சிர முக நாசி சிறந்த கை தோள் தான் அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே. |
|
உரை
|
|
|
|
|
7 | செவி மந்திரம் சொல்லும் செய் தவத் தேவர் அவி மந்திரத்தின் அடுக்களை கோலிச் செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும் குவி மந்திரம் கொல் கொடியது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
8 | நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப் பல்லார் அமரர் பரிந்து அருள் செய்க என வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன் பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. |
|
உரை
|
|
|
|
|
9 | தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச் சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே. |
|
உரை
|
|
|
|