தொடக்கம் |
|
|
இரண்டாம் தந்திரம் 17. அபாத்திரம் |
1 | கோல வறட்டைக் குனிந்து குளகு இட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து காலம் கழிந்த பயிர் அது ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஈவது யோக இயம நியமங்கள் சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு ஈவ பெரும் பிழை என்று கொளீரே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஆம் ஆறு அறியான் அதி பஞ்சபாதகன் தோம் ஆறும் ஈசற்கும் தூய குரவற்கும் காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன் போமா நரகில் புகான் போதம் கற்கவே. |
|
உரை
|
|
|
|
|
4 | மண் மலை யத்தனை மாதனம் ஈயினும் அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய் எண்ணி இறைஞ்சா தார்க்கு ஈந்த இருவரும் நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே. |
|
உரை
|
|
|
|