தொடக்கம் |
|
|
இரண்டாம் தந்திரம் 20. அதோமுக தரிசனம் |
1 | எம்பெருமான் இறைவா முறையோ என்று வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல அம் பவள மேனி அறுமுகன் போய் அவர் தம் பகை கொல் என்ற தற்பரன் தானே. |
|
உரை
|
|
|
|
|
2 | அண்ட மொடு எண்திசை தாங்கும் அதோ முகம் கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர் வெண் தலை மாலை விரிசடை யோற்கே. |
|
உரை
|
|
|
|
|
3 | செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப் பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்கள் மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன் மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே. |
|
உரை
|
|
|
|
|
4 | நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும் முந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோ முகம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
5 | அதோ முகம் கீழ் அண்டம் ஆன புராணன் அதோ முகத் தன்னொடும் எங்கும் முயலும் சதோ முகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும் அதோ முகன் ஊழித் தலைவனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
6 | அதோ முகம் மா மலர் ஆயது கேளும் அதோ முகத்தால் ஒரு நூறாய் விரிந்து அதோ முகம் ஆகிய அந்தம் இல் சத்தி அதோ முகம் ஆகி அமர்ந்து இருந்தானே. |
|
உரை
|
|
|
|