தொடக்கம் |
|
|
இரண்டாம் தந்திரம் 21. சிவநிந்தை |
1 | தெளி உறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே அளி உறுவார் அமரா பதி நாடி எளியன் என்று ஈசனை நீசர் இகழில் கிளி ஒன்று பூஞையில் கீழ் அது ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
2 | முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத் தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே. |
|
உரை
|
|
|
|
|
3 | அப்பகை யாலே அசுரரும் தேவரும் நல் பகை செய்து நடுவே முடிந்தனர் எப்பகைஆகிலும் எய்தார் இறைவனைப் பொய்ப் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | போகமும் மாதர் புலவி அது நினைந்து ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால் வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே. |
|
உரை
|
|
|
|