தொடக்கம் |
|
|
மூன்றாம் தந்திரம் 9. சமாதி |
1 | சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும் சமாதி யமாதியில் தான் எட்டுச் சித்தி சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே சமாதி யமாதி தலைப்படும் தானே. |
|
உரை
|
|
|
|
|
2 | விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில் சந்தியில் ஆன சமாதியில் கூடிடும் அந்தம் இலாத அறிவின் அரும் பொருள் சுந்தரச் சோதியும் தோன்றிடும் தானே. |
|
உரை
|
|
|
|
|
3 | மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும் கண்டு உணர்வாகக் கருதி இருப்பார்கள் செண்டு வெளியில் செழும் கிரியத்து இடை கொண்டு குதிரை குசை செறுத்தாரே. |
|
உரை
|
|
|
|
|
5 | மூல நாடி முகட்டலகு உச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் மேலை வாசல் வெளியுறக் கண்ட பின் காலன் வார்த்தை கனவிலும் இல்லையே. |
|
உரை
|
|
|
|
|
6 | மண்டலம் ஐந்து வரைகளும் ஈர் ஆறு கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர் கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே. |
|
உரை
|
|
|
|
|
7 | பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவைத் தேட்டு அற்ற அந்நிலம் சேரும்படி வைத்து நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
8 | உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர் கருவரை பற்றிக் கடைந்து அமுது உண்டார் அருவரை ஏறி அமுது உண்ண மாட்டார் திருவரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே. |
|
உரை
|
|
|
|
|
9 | நம்பனை ஆதியை நால் மறை ஓதியைச் செம் பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கிப் போய்க் கொம்பு ஏறிக் கும்பிட்டுக் கூட்டம் இட்டாரே. |
|
உரை
|
|
|
|
|
10 | மூலத்து மேல் அது முச்சதுரத்து காலத் திசையில் கலக்கின்ற சந்தினில் மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. |
|
உரை
|
|
|
|
|
11 | கற்பனை அற்றுக் கனல் வழியே சென்று சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேர் ஒளிப் பொற்பினை நாடிப் புணர் மதியோடு உற்றுத் தற்பரம் ஆகத் தகும் தண் சமாதியே. |
|
உரை
|
|
|
|
|
12 | தலைப்பட்டு இருந்திடத் தத்துவம் கூடும் வலைப் பட்டு இருந்திடும் மாது நல்லாளும் குலைப் பட்டு இருந்திடும் கோபம் அகலும் துலைப் பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
13 | சோதித் தனிச் சுடராய் நின்ற தேவனும் ஆதியும் உள்நின்ற சீவனும் ஆகும் ஆல் ஆதிப் பிரமன் பெரும் கடல் வண்ணனும் ஆதி அடிபணிந்து அன்புறு வாரே. |
|
உரை
|
|
|
|
|
14 | சமாதி செய்வார்க்குத் தகும் பல யோகம் சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில் சமாதியில் எட்டுஎட்டுச் சித்தியும் எய்துமே. |
|
உரை
|
|
|
|