தொடக்கம் |
|
|
மூன்றாம் தந்திரம் 15. ஆயுள் பரீட்சை |
1 | வைத்த கை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம் அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில் நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின் கண் ஓசை இறந்தவர் ஈசனை உள் குவர் ஓசை இறந்தவர் நெஞ்சின் உள் ஈசனும் ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் நாமே உறைகின்ற நன்மை அளித்திடும் பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும் தாமேல் உலகில் தலைவனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | தலைவனிடம் வலம் சாதிப்பார் இல்லை தலைவனிடம் வலம் ஆயிடில் தையல் தலைவனிடம் வலம் தன் வழி அஞ்சில் தலைவனிடம் வலம் தன் வழி நூறே. |
|
உரை
|
|
|
|
|
5 | ஏறிய வானில் எண்பது சென்றிடும் தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில் ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும் தேறியே நின்று தெளி இவ் வகையே. |
|
உரை
|
|
|
|
|
6 | இவ்வகை எட்டும் இடம் பெற ஓடிடில் அவ் வகை ஐம்பதே என்ன அறியலாம் செவ் வகை ஒன்பதும் சேரவே நின்றிடின் மூவ் வகை ஆம் அது முப்பத்து மூன்றே. |
|
உரை
|
|
|
|
|
7 | மும் மூன்றும் ஒன்றும் முடிவு உற நின்றிடில் எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும் ஐம் மூன்றும் ஓடி அகலவே நின்றிடில் பன் மூன்றொடு ஈர் ஆறு பார்க்கலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
8 | பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில் ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டுப் போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில் தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே. |
|
உரை
|
|
|
|
|
9 | ஏ இரு நாளும் இயல்பு உற ஓடிடில் பாய் இரு நாளும் பகை அற நின்றிடும் தேய் உற மூன்றும் திகழவே நின்றிடில் ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
10 | அளக்கும் வகை நாலும் அவ்வழியே ஓடில் விளக்கும் ஒரு நாலும் மெய்ப் பட நிற்கும் துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில் களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
11 | காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில் காணலும் ஆகும் கலந்த இரண்டையும் காணலும் ஆகும் கலப்பு அற மூ ஐந்தேல் காணலும் ஆகும் கருத்து உற ஒன்றே. |
|
உரை
|
|
|
|
|
12 | கருதும் இருபதில் காண ஆறு ஆகும் கருதும் ஐ ஐந்தில் காண்பது மூன்று ஆம் கருதும் இருபது உடன் ஆறு காணில் கருதும் இரண்டு எனக் காட்டலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
13 | காட்டலும் ஆகும் கலந்து இருபத்து ஏழில் காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று எனக் காட்டலும் ஆகும் கலந்து இரு பத்து எட்டில் காட்டலும் ஆகும் கலந்த ஈர் ஐந்தே. |
|
உரை
|
|
|
|
|
14 | ஈர் ஐந்தும் ஐந்தும் இரு மூன்று எட்டுக்கும் பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும் வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில் ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே. |
|
உரை
|
|
|
|
|
15 | ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்து ஒன்று ஆகில் கன்றிய நாளும் கருத்து உற மூன்று ஆகும் சென்று உயிர் நால் எட்டும் சேரவே நின்றிடின் மன்று இயல்பாகும் மனையில் இரண்டே. |
|
உரை
|
|
|
|
|
16 | மனையில் ஒன்று ஆகும் மாதம் மும் மூன்றும் சுனையில் ஒன்று ஆகத் தொனித்தனன் நந்தி வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால் தனை உற நின்ற தலைவனும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
17 | ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை ஆரும் அறியார் அழிகின்ற அப்பொருள் ஆரும் அறியார் அறிவு அறிந்தேனே. |
|
உரை
|
|
|
|
|
18 | அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய அறிவாவது தான் உலகு உயிர் அத்தின் பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில் செறிவது நின்று திகழும் அதுஏ. |
|
உரை
|
|
|
|
|
19 | அது அருளும் மருள் ஆன உலகம் பொது அருளும் புகழாளர்க்கு நாளும் மது அருளும் மலர் மங்கையர் செல்வி இது அருள் செய்யும் இறையவன் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
20 | பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி குறிப்பது கூடிய கோலக் குரம்பைப் பழப்பதி ஆவது பற்று அறும் பாசம் அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே. |
|
உரை
|
|
|
|