மூன்றாம் தந்திரம்

19. பரியங்கயோகம்

1பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறும் குழல் மாலையும் சாத்திக்
காயக் குழலி கலவியொடும் கலந்து
தூசி துளை உறத் தூங்காது போகமே.
உரை
   
2போகத்தை உன்னவே போகாது வாயுவும்
மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும்
தாதில் குழைந்து தலை கண்ட வாறே.
உரை
   
3கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து
மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற் கொண்டு வான் நீர் உருட்டிடத்
தண்டு ஒரு காலும் தளராது அங்கமே.
உரை
   
4அங்கப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனும் ஆமே.
உரை
   
5தலைவனும் ஆயிடும் தன் வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன்வழி போகம்
தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே
தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே.
உரை
   
6அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில்
துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது
பஞ்ச கடிகை பரியங்க யோகமே.
உரை
   
7பரி அங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரிய இவ் வியோகம் அடைந்தவர்க்கு அல்லது
சரிவளை முன் கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கு ஒண்ணாதே.
உரை
   
8ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில்
விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே.
உரை
   
9ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம்
வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே.
உரை
   
10வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத் தட்டானார் கரி இட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல் வழியே சென்று
வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே.
உரை
   
11வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதின் எண் கணத்துக்கும்
வித்தகன் ஆய் நிற்கும் வெம் கதிரோனே.
உரை
   
12வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம்
தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம்
திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே.
உரை
   
13திருத்திப் புதனைத் திருத்தல் செய்வார்க்குக்
கருத்து அழகாலே கலந்து அங்கு இருக்கில்
வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும்
துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே.
உரை
   
14எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால்
மெழுகு உருகும் பரி செய்திடும் மெய்யே
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளி அறிவார்க்கே.
உரை
   
15வெளியை அறிந்து வெளியின் நடுவே
ஒளியை அறியின் உளி முறி ஆம் ஏ
தெளிவை அறிந்து செழும் நந்தியாலே
வெளியை அறிந்தனன் மேல் அறியேனே.
உரை
   
16மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின்
மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர்
நாலா நிலத்தின் நடு ஆன அப்பொருள்
மேலா உரைத்தனர் மின் இடை யாளுக்கே.
உரை
   
17மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்துப்
பொன் இடை வட்டத்தின் உள்ளே புகப் பெய்து
தன்னொடு தன்னைத் தலைப் பெய்ய வல்லார் ஏன்
மண் இடைப் பல் ஊழி வாழலும் ஆமே.
உரை
   
18வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை
வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும்
ஓங்கிய தன்னை உதம் பண்ணினாரே.
உரை
   
19உதம் அறிந்து அங்கே ஒரு சுழிப் பட்டால்
கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி
பதம் அறிந்து உம் உளே பார்க் கடிந்தாளே.
உரை
   
20பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று உண்டு
தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது
ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு
கீழ் இல்லை மேல் இல்லை கேள்வி இல் பூவே.
உரை