தொடக்கம் |
|
|
மூன்றாம் தந்திரம் 20. அமுரிதாரணை |
1 | உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்க் கடலில் சிறு கிணறு ஏற்றம் இட்டால் ஒக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில் நடலைப் படாது உயிர் நாடலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
2 | தெளிதரும் இந்தச் சிவ நீர் பருகில் ஒளிதரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை வளி உறும் எட்டின் மனமும் ஒடுங்கும் களிதரும் காயம் கனகம் அது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
3 | நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர் மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள் தேறில் இதனைத் தெளி உச்சி அப்பிடின் மாறும் இதற்கு மறு மயிர் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | கரை அருகே நின்ற கானல் உவரி வரை வரை என்பவர் மதி இலா மாந்தர் நுரை திரை நீக்கி நுகர வல்லார்க்கு நரை திரை மாறும் நமனும் அங்கு இல்லையே. |
|
உரை
|
|
|
|
|
5 | அளக நல் நுதலாய் ஓர் அதிசயம் களவு காயம் கலந்த இந் நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் இளகும் மேனி இருளும் கபாலமே. |
|
உரை
|
|
|
|
|
6 | வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும் நாரி மருந்து என்றும் நந்தி அருள் செய்தான் ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம் சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே. |
|
உரை
|
|
|
|