மூன்றாம் தந்திரம்

21. சந்திர யோகம்

1எய்து மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
எய்தும் கலை போல ஏறி இறங்கும் ஆந்து
உய்யது சூக்கத்து ஊலத்த காயமே.
உரை
   
2ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கி உள்
ஆகின்ற ஈர் எட்டொடு ஆறு இரண்டு ஈர் ஐந்துள்
ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.
உரை
   
3ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன்
நாறா நலம் கினார் ஞாலம் அங்கு அவர் கொளப்
பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈர் எட்டு
மாறாக் கதிர் கொள்ளும் மற்று அங்கி கூடவே.
உரை
   
4பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை
பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி
ஒத்த நல் அங்கி அது எட்டு எட்டு உயர் கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே.
உரை
   
5எட்டு எட்ட அனலின் கலை ஆகும் ஈர் ஆறுள்
சுட்டப் படும் கதிரோனுக்கும் சூழ் கலை
கட்டப் படும் ஈர் எட்டாம் மதிக் கலை
ஒட்டப் படா இவை ஒன்றோடு ஒன்றாவே.
உரை
   
6எட்டு எட்டும் ஈர் ஆறும் ஈர் எட்டும் தீக் கதிர்
சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை எனக்
கட்டப் படும் தாரகை கதிர் நாலு உள
கட்டி இட்ட தொண்ணூற்றொடு ஆறும் கால் ஆதியே.
உரை
   
7எல்லாக் கலையும் இடை பிங்கலை நடுச்
சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே.
உரை
   
8அங்கியில் சின்னக் கதிர் இரண்டு ஆட்டத்துத்
தங்கிய தாரகை ஆகும் சசி பானு
வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி
தங்கு நவ சக்கரம் ஆகும் தரணிக்கே.
உரை
   
9தரணி சலம் கனல் கால் தக்க வானம்
அரணிய பானு அரும் திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவம் ஆகும் பெரு நெறி தானே.
உரை
   
10தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவில் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தான் ஆம் சொரூபமே.
உரை
   
11முன் பதினைந்தின் முளைத்துப் பெருத்திடும்
முன் பதினைந்தில் பெருத்துச் சிறுத்திடும்
அப் பதினைஞ்சும் அறிவல்லார் கட்குச்
செப்ப அரியான் கழல் சேர்தலும் ஆமே.
உரை
   
12அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்துத்
தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகிப்
பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அறத்
திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே.
உரை
   
13ஒன்றிய ஈர் எண்கலையும் உடல் உற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்து உழி வைத்த பின்
சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே.
உரை
   
14அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி
அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி
அங்கி சசி கதிர் கூட அத்தாரகை
தங்கிய அதுவே சகலமும் ஆமே.
உரை
   
15ஈர் ஆறு பெண்கலை எண் இரண்டு ஆண் கலை
பேராமல் புக்குப் பிடித்துக் கொடு வந்து
நேராகத் தோன்றும் நெருப்பு உறவே பெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே.
உரை
   
16காணும் பரிதியின் காலை இடத்து இட்டு
மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீர் ஏல்
ஆணி கலங்காது அவ் ஆயிரத்து ஆண்டே.
உரை
   
17பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.
உரை
   
18கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும்
அதிரவன் அண்டப் புறம் சென்று அடர்ப்ப
எதிரவன் ஈசன் இடம் அது தானே.
உரை
   
19உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர்
அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்த பின்
தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே.
உரை
   
20ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீர் ஏல்
வேதியன் அங்கே வெளிப்படும் தானே.
உரை
   
21பாம்பு மதியைத் தினல் உறும் பாம்பினைத்
தீங்கு கதிரையும் சோதித்தனல் உறும்
பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ
நீங்கல் கொடானே நெடும் தகையானே.
உரை
   
22அயின்றது வீழ் அளவும் துயில் இன்றிப்
பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று
நயம் தரு பூரணை உள்ள நடத்தி
வியம் தரு பூரணை மேவும் சசியே.
உரை
   
23சசி உதிக்கும் அளவும் துயில் இன்றிச்
சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச்
சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல்
சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே.
உரை
   
24ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழ வல்லார் இச் சசி வன்னர் ஆமே.
உரை
   
25தண் மதி பானுச் சரி பூமியே சென்று
மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு
வெண் மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே.
உரை
   
26வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும்
தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும்
மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே.
உரை
   
27ஆம் உயிர்த் தேய் மதி நாளே எனல் விந்து
போம் வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையில் கட்டு உண்ணும் மூலத்தில்
ஓ மதியத்து உள் விட்டு உரை உணர்வாலே.
உரை
   
28வேறு உறச் செம் கதிர் மெய்க்கலை ஆறு ஓடும்
சூர் உற நான்கும் தொடர்ந்து உறவே நிற்கும்
ஈறிலி நன் கலை ஈர் ஐந் தொடே மதித்து
ஆறுள் கலையுள் அகலுவா வாமே.
உரை
   
29உணர் விந்து சோணி உறவினன் வீசும்
புணர் விந்து வீசும் கதிரில் குறையில்
உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே.
உரை
   
30விடாத மனம் பவனத் தொடு மேவி
நடாவு சிவ சங்கின் நாதம் கொளுவிக்
கடா விடா ஐம் புலன் கட்டு உண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே.
உரை
   
31அமுதப் புனல் வரு மாற்றம் கரைமேல்
குமிழிக் குள் சுடர் ஐந்தையும் கூட்டிச்
சமையத் தண் தோட்டித் தரிக்க வல்லார்க்கு
நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே.
உரை
   
32உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து
எண்ணீர் இணை அடித் தாமரைக்கே செலத்
தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம்
கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே.
உரை
   
33மாறு மதியும் மதித்து இரு மாறு இன்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப் படில்
ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும்
பாறு படா இன்பம் பார்மிசைப் பொங்குமே.
உரை