தொடக்கம் |
|
|
நான்காம் தந்திரம் 3. அருச்சனை |
1 | அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல் வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. |
|
உரை
|
|
|
|
|
2 | சாங்கம் அது ஆகவே சந்தொடு சந்தனம் தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில் பாங்கு படப் பனி நீரால் குழைத்து வைத்து ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பு ஒடே. |
|
உரை
|
|
|
|
|
3 | அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே பொன் செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும் துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால் இன்டனே வந்து எய்திடும் முத்தியே. |
|
உரை
|
|
|
|
|
4 | எய்தி வழிப் படில் எய்தாதன இல்லை எய்தி வழிப் படில் இந்திரன் செல்வம் முன் எய்தி வழிப் படில் எண் சித்தி உண்டாகும் எய்தி வழிப் படில் எய்திடும் முத்தியே. |
|
உரை
|
|
|
|
|
5 | நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார் மண்ணிய நைவேத்தியம் அனு சந்தான நண்ணிய பஞ்சாங்க நண்ணும் செபம் என்னும் மன்னும் அன பவனத் தொடு வைகுமே. |
|
உரை
|
|
|
|
|
6 | வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர் வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்ற பேர் வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே. |
|
உரை
|
|
|
|
|
7 | அறிவரும் ஞானத்து எவரும் அறியார் பொறிவழி தேடிப் புலம்பு கின்றார்கள் நெறி மனை உள்ளே நிலை பெற நோக்கில் எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
8 | இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதய மருள் அறியாமையும் மன்னும் அறிவு மருள் இவை விட்டு அறியாமை மயக்கும் மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே. |
|
உரை
|
|
|
|
|
9 | தானவன் ஆக அவனே தான் ஆயிட ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆகப் போனவன் அன்பு இது நால் ஆம் மரபுறத் தானவன் ஆகும் ஓர் ஆதித்த தேவரே. |
|
உரை
|
|
|
|
|
10 | ஓங்கார உந்திக்கு கீழ் உற்றிடும் எந் நாளும் நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும் பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும் வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
11 | நமவது ஆசனம் ஆன பசுவே சிவமது சித்திச் சிவமாம் பதியே நமஅற ஆதி நாடுவது அன்றாம் சிவம் ஆகும் மா மோனம் சேர்தல் மெய் வீடே. |
|
உரை
|
|
|
|
|
12 | தெளி வரும் நாளில் சிவ அமுது ஊறும் ஒளி வரு நாளில் ஓர் எட்டில் உகளும் ஒளி வரும் அப் பதத்து ஓர் இரண்டு ஆகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்துஏ. |
|
உரை
|
|
|
|