தொடக்கம் |
|
|
நான்காம் தந்திரம் 10. வயிரவச் சக்கரம் |
1 | அறிந்த பிரதமை யோடு ஆறும் அறிஞ்சு அறிந்த அச்சத்தம் இம் மேல் இவை குற்றம் அறிந்தவை ஒன்று விட்டு ஒன்று பத்து ஆக அறிந்து வலம் அது ஆக நடவே. |
|
உரை
|
|
|
|
|
2 | நடந்து வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண் அது போக்கித் தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஆமே அப் பூண்ட அருள் ஆதி வயிரவன் ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு ஆமே தமருக பாசமும் கை அது ஆமே சிரத்தொடு வாள் அது கையே. |
|
உரை
|
|
|
|
|
4 | கை அவை ஆறும் கருத்து உற நோக்கிடும் மெய் அது செம்மை விளங்கு வயிரவன் துய்யர் உளத்தில் துளங்கு மெய் உற்றது ஆய்ப் பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே. |
|
உரை
|
|
|
|
|
5 | பூசனை செய்யப் பொருந்தி ஓர் ஆயிரம் பூசனை செய்ய மது உடன் ஆடும் ஆல் பூசனை சாந்து சவாது புழுகு நெய் பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே. |
|
உரை
|
|
|
|
|
6 | வேண்டிய வாறு கலகமும் ஆயிடும் வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்றபின் வேண்டியவாறு வரும் வழி நீ நட வேண்டிய வாறு அது ஆகும் கருத்தே. |
|
உரை
|
|
|
|