நான்காம் தந்திரம்

11. சாம்பவி மண்டலச் சக்கரம்

1சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேல் அதாம்
காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும்
நாம் பதம் கண்டபின் நாடறிந்தோமே.
உரை
   
2நாடு அறி மண்டலம் நல்ல இக் குண்டத்துக்
கேடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி
பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி
ஏடு அற நாலு ஐந்து இட வகை ஆமே.
உரை
   
3நாலு ஐந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம்
நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கம் ஆய்
நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கம் ஆய்
நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே.
உரை
   
4ஆறு இருபத்து நால் அஞ்சு எழுத்து அஞ்சையும்
வேறு உரு ஆக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நம என்று
கூறு மின் கூறில் குறைகளும் இல்லையே.
உரை
   
5குறைவதும் இல்லை குரை கழல் கூடும்
அறைவதும் ஆரணம் அவ் எழுத்து ஆகித்
திறம் அது ஆகத் தெளிய வல்லார்க்கு
இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே.
உரை
   
6காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆகக்
காணும் கனகமும் காரிகை ஆமே.
உரை
   
7ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆகப்
போமே அது தானும் போம் வழியே போனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே.
உரை
   
8பகை இல்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகை இல்லை நாள் நாளும் நன்மைகள் ஆகும்
வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை
தகை இல்லை தானும் சலம் அது ஆமே.
உரை
   
9ஆரும் உரை செய்யலாம் அஞ்சு எழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம்
பாரும் விசும்பும் பகலும் அதி அதி
ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே.
உரை