நான்காம் தந்திரம்

12. புவனாபதி சக்கரம்

1ககர் ஆதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை
அகர் ஆதி ஓர் அரத்தமே போலும்
சகர் ஆதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை
ககர் ஆதி மூவித்தை காமிய முத்தியே.
உரை
   
2ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக்கேள்
வாரில் திரிகோணம் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவ காயம் தானே.
உரை
   
3ஏக பராசத்தி ஈசற்கு ஆம் அங்கமே
ஆகம் பரா வித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பரா சத்தி ஆகச் சிவ குரு
யோகம் பரா சத்தி உண்மை எட்டு ஆமே.
உரை
   
4எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்துக்
கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்த
தொட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது
கிட்டாது ஒழிந்தது கீழ் ஆன மூடர்க்கே.
உரை
   
5ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி
ஓதிக் குருவின் உபதேசம் கொண்டு
நீ தங்கும் அங்க நியாசம்தனைப் பண்ணிச்
சாதம் கெடச் செம்பில் சட்கோணம் தான் இடே.
உரை
   
6சட் கோணம் தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு
அக் கோணம் மாறின் தலையில் ரீங்காரம் இட்டு
எக்கோணமும் சூழ எழில் வட்டம் இட்டுப் பின்
மிக்கு ஈர் எட்டு அக்கரமம் முதன் மேல் இடே.
உரை
   
7இட்ட இதழ்கள் இடை அந்தரத் திலே
அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம்
இட்டு வாமத்து ஆங்கு கிரோம் என்று மேவிடே.
உரை
   
8மேவிய சக்கரம் மீது வலத்திலே
கோவை அடையவே குரோம் சிரோம் என்று இட்டுத்
தாவுஇல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப் பின் பூசியே.
உரை
   
9பூசிக்கும் போது புவனா பதி தன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம் பண்ணிப்
பேசிய பிராணப் பிஅதிட்டை அது செய்து
தேசு உற்றிடவே தியானம் அது செய்யே.
உரை
   
10செய்ய திருமேனி செம்பட்டு உடைத் தானும்
கையில் படை அங்குச பாசத்தோடு அபய
மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி
துய்ய முடியும் அவ யவத்தில் தோற்றமே.
உரை
   
11தோல் போர்வை நீக்கித் துதித்து அடைவில் பூசித்துப்
பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி
நால் பால நாரதா யா சுவாகா என்று
சீர்ப் பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே.
உரை
   
12சேவிப்பதன் முன்னே தேவியையும் உத் வாகனத்தால்
பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு
யாவருக்கும் எட்டா இயந்திர ராசனை
நீ வைத்துச் சேமி நினைந்தது தருமே.
உரை