தொடக்கம் |
|
|
ஐந்தாம் தந்திரம் 1. சுத்த சைவம் |
1 | ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற பேர் அறிவாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழுந்து தாரணி நால் வகைச் சைவமும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
2 | சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டு சித்தும் அசித்தும் சேர் உறாமே நீத்த சுத்தம் அசுத்தமும் தோய் உறாமே நின்று நித்தம் பரஞ் சுத்தம் சைவர்க்கு நேயமே. |
|
உரை
|
|
|
|
|
3 | கற்பன கற்றுக் கலை மன்னும் மெய் யோகம் முற்பத ஞான முறை முறை நண்ணியே சொற் பதம் மேவித் துரிசு அற்று மேல் ஆன தற்பரம் கண்டு உளோர் சைவ சிந்தாந்தரே. |
|
உரை
|
|
|
|
|
4 | வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர் பூதாந்த போதாந்தம் ஆகப் புனம் செய்ய நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே. |
|
உரை
|
|
|
|