தொடக்கம் |
|
|
ஐந்தாம் தந்திரம் 6. கிரியை |
1 | பத்துத் திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு எத்திக் கிலர் இல்லை என்பதின் அமலர்க்கு ஒத்துத் திருவடி நீழல் சரண் எனத் தத்தும் வினைக் கடல் சாராது காணுமே. |
|
உரை
|
|
|
|
|
2 | கான் உறு கோடி கடி கமழ் சந்தனம் வான் உறு மா மலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது தேன் அமர் பூங் கழல் சேர ஒண்ணாதே. |
|
உரை
|
|
|
|
|
3 | கோனக் கன்று ஆயே குரைகழல் ஏத்து மின் ஞானக் கன்று ஆகிய நடுவே உழிதரும் வானக் கன்று ஆகிய வானவர் கைதொழு மானக் கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம் அது பணி செய்கின்றவள் ஒரு கூறன் இது பணி மானுடர் செய் பணி ஈசன் பதி பணி செய்வது பத்திமை காணே. |
|
உரை
|
|
|
|
|
5 | பத்தன் கிரியை சரியை பயில் உற்றுச் சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில் உய்த்த நெறி உற்று உணர் கின்ற ஞானத்தால் சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
6 | அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன் செம் பொன் செய் மேனி கமலத் திருவடி முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள் என்பின் உள் சோதி இலங்கு கின்றானே. |
|
உரை
|
|
|
|