தொடக்கம் |
|
|
1 | நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றித் தறி இருந்தால் போல் தம்மை இருத்திச் சொறியினும் தாக்கினும் துண் என்று உணராக் குறி அறி வாளர்க்குக் கூடலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஊழிதோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால் ஊழிதோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் ஆழி அமரும் அரி அயன் என்று உளார் ஊழி முயன்றும் ஒருச்சி உளானே. |
|
உரை
|
|
|
|
|
3 | பூவினில் கந்தம் பொருந்திய வாறு போல் சீவனுக்கு உள்ளே சிவ மணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு நாவி அணைந்த நடுதறி ஆமே. |
|
உரை
|
|
|
|
|
4 | உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரில் கலக்கின்ற நந்தியைச் சிந்தை உறவே தெளிந்து இருள் நீங்கினால் முந்தைப் பிறவிக்கு மூல வித்து ஆமே. |
|
உரை
|
|
|
|
|
5 | எழுத்தொடு பாடலும் எண் எண் கலையும் பழித்தலை பாசப் பிறவியும் நீங்கா வழித்தலை சோமனோடு அங்கி அருக்கன் வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே. |
|
உரை
|
|
|
|
|
6 | விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும் விரும்பி நின்றே செயின் மெய் உரை ஆகும் விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும் விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே. |
|
உரை
|
|
|
|
|
7 | பேணில் பிறவா உலகுஅருள் செய்திடும் காணில் தனது கலவி உளே நிற்கும் நாணில் நரக நெறிக்கே வழி செயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே. |
|
உரை
|
|
|
|
|
8 | ஒத்த செங் கோலார் உலப்பு இலி மாதவர் எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண் இலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்தன் இவன் என்றே அன்பு உறுவார்களே. |
|
உரை
|
|
|
|
|
9 | யோகிக்கு யோக ஆதி மூன்று உள கொண்டு உற்றோர் ஆகத் தகு கிரி ஆதி சரியை ஆம் தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள் ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே. |
|
உரை
|
|
|
|
|
10 | யோகச் சமயமே யோகம் பல உன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம் யோக நிர்வாணமே உற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண் சித்தி உற்றலே. |
|
உரை
|
|
|
|