ஐந்தாம் தந்திரம்

12. தாசமார்க்கம்

1எளிய நல் தீபம் இடல் மலர் கொய்தல்
அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி
அளி தொழில் செய்வது தான் தாச மார்க்கமே.
உரை
   
2அது இது ஆதிப் பரம் என்று அகல்வர்
இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை
விதிவழியே சென்று வேந்தனை நாடு
மது இது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.
உரை
   
3அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்ப வானவர் தேவனை நாள்தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே.
உரை
   
4அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழக்
கண் அவன் என்று கருதும் அவர்கட்குப்
பண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே.
உரை
   
5வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின்
மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை
நேசத்து இருந்த நினைவு அறியாரே.
உரை
   
6எவ்விடத்தும் பணி இன்மை கண்டு உள்ளவர்
எவ்விடத்தும் பணி ஈசன் பணி என்றே
அவ்விடத்து ஐங்கருமத்தால் அறிதலால்
உவ்விடத்தோருக்கு ஓர் உபாயம் இல்லையே.
உரை