தொடக்கம் |
|
|
ஐந்தாம் தந்திரம் 18. புறச் சமயதூடணம் |
1 | ஆயத்து உள் நின்ற அறு சமயங்களும் காயத்து உள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனை மக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஆறு சமய முதலாம் சமயங்கள் ஊறு அது எனவும் உணர்க உணர்பவர் வேறு அது அற உணர்வார் மெய்க் குரு நந்தி ஆறி அமைபவர்க்கு அண்ணிக்கும் தானே. |
|
உரை
|
|
|
|
|
3 | உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன் வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன் பொள்ளல் குரம்பைப் புகுந்து புறப்படும் கள்ளத் தலைவன் கருத்து அறியார்களே. |
|
உரை
|
|
|
|
|
4 | உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே. |
|
உரை
|
|
|
|
|
5 | முதல் ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும் திதமுறு கொம்பு செவி துதிக்கை கான் மதியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே அது கூறல் ஒக்கும் ஆறு சமயமே. |
|
உரை
|
|
|
|
|
6 | ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவன் அலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்த பின் மாறுதல் இன்றி மனைபுகல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
7 | சிவம் அல்லது இல்லை அறையே சிவம் ஆம் தவம் அல்லது இல்லை தலைப்படு வார்க்கு இங்கு அவம் அல்லது இல்லை அறு சமயங்கள் தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே. |
|
உரை
|
|
|
|
|
8 | அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவர் ஆக மிகவும் விரும்பியே முண் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால் மண் நின்று ஒழியும் வகை அறியார்களே. |
|
உரை
|
|
|
|
|
9 | சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம் மவகதி பாசப் பிறவி ஒன்று உண்டு தவகதி தன்னொடு நேர் ஒன்று தோன்றில் அவகதி மூவரும் அவ் வகை ஆமே. |
|
உரை
|
|
|
|
|
10 | நூறு சமயம் உளவா நுவலுங்கால் ஆறு சமயம் அவ் ஆறு உட்படுவன கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா வீறு பர நெறி இல்லா நெறி யன்றே. |
|
உரை
|
|
|
|
|
11 | கத்தும் கழுதைகள் போலும் கலதிகள் சுத்த சிவன் எங்கும் தோய் உற்று நிற்கின்றான் குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார் பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே. |
|
உரை
|
|
|
|
|
12 | மயங்கு கின்றாரும் மதி தெளிந்தாரும் முயங்கி இருவினை முழை முகப் பாச்சி இயங்கிப் பெறுவரேல் ஈறு அது காட்டில் பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே. |
|
உரை
|
|
|
|
|
13 | சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு மாயன் மயக்கிய மானுடராம் அவர் காயம் விளைக்கும் கருத்து அறியார்களே. |
|
உரை
|
|
|
|
|
14 | வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன பழி அது பார்மிசை வாழ்தல் உறுதல் சுழி அறி வாளன் தன் சொல் வழி முன்நின்று அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே. |
|
உரை
|
|
|
|
|
15 | மாதவர் எல்லாம் மா தேவன் பிரான் என்பர் நாதம் அது ஆக அறியப் படும் நந்தி பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில் ஆதியும் அந் நெறி ஆகி நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
16 | அரன் நெறி அப்பனை ஆதிப் பிரானை உரன் நெறி ஆகி உளம் புகுந்தானைப் பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரன் அறியா விடில் பல்வகைத் தூரமே. |
|
உரை
|
|
|
|
|
17 | பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன் பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும் துரிசு அற நீ நினை தூய் மணி வண்ணன் அரிது அவன் வைத்த அற நெறி தானே. |
|
உரை
|
|
|
|
|
18 | ஆன சமயம் அது இது நன்று எனும் மாய மனிதர் மயக்கம் அது ஒழி கானம் கடந்த கடவுளை நாடுமின் ஊனம் கடந்த உரு அது ஆமே. |
|
உரை
|
|
|
|
|
19 | அந் நெறி நாடி அமரர் முனிவரும் செல் நெறி கண்டார் சிவன் எனப் பெற்றார் பின் முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார் செல் நெறி செல்லார் திகைக்கின்ற வாறே. |
|
உரை
|
|
|
|
|
20 | உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே. |
|
உரை
|
|
|
|
|
21 | வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம் கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர் சுழி நடக்கும் துயரம் அது நீக்கிப் பழி நடப் பார்க்குப் பரவலும் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
22 | வழி சென்ற மாதவம் வைகின்ற போது பழி செல்லும் வல்வினைப் பற்று அறுத்து ஆங்கே வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே. |
|
உரை
|
|
|
|