ஆறாம் தந்திரம்

2. திருவடிப் பேறு

1இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே
பசைந்து எழும் ஈசரைப் பாசத்து உள் ஏகச்
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குரு பதம் உள்ளத்து வந்ததே.
உரை
   
2தாள் தந்த போதே தலை தந்த எம் இறை
வாள் தந்த ஞான வலியையும் தந்து இட்டு
வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள்
பாடின் முடி வைத்துப் பார் வந்து தந்ததே.
உரை
   
3தானவன் ஆகிச் சொரூபத்து வந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி
தான் அடி முன் சூட்டித் தாபித்தது உண்மையே.
உரை
   
4உரை அற்று உணர்வு அற்று உயிர் பரம் அற்று
திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்துக்
கரை அற்ற சத்து ஆதி நான்கும் கடந்த
சொரூபத்து இருத்தினன் சொல் இறந்தோமே.
உரை
   
5குரவன் உயிர் முச் சொரூ பமும் கைக் கொண்டு
அரிய பொருள் முத்திரை ஆகக் கொண்டு
பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று
உருகிட என்னை அங்கு உய்யக் கொண்டானே.
உரை
   
6பேச்சு அற்ற இன்பத்துப் பேர் ஆனந்தத்திலே
மாச்சு அற்ற என்னைச் சிவம் ஆக்கி ஆள்வித்துச்
காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக் கொண்டு
வாச்ச புகழ் மாளத் தாள் தந்து மன்னுமே.
உரை
   
7இதயத்தும் நாட்டத்தும் என்தன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதி வைத்த வாறும் மெய் காட்டிய வாறும்
விதி வைத்த வாறும் விளம்ப ஒண்ணாதே.
உரை
   
8திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கிப்
பெருவடி வைத்து அந்தப் பேர் நந்தி தன்னைக்
குரு வடிவில் கண்ட கோனை எம் கோவைக்
கரு வழி ஆற்றிடக் கண்டு கொண்டேனே.
உரை
   
9திருவடி ஞானம் சிவம் ஆக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும்
திருவடி ஞானமே திண் சித்தி முத்தியே.
உரை
   
10மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை
மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும்
பால் வைத்த சென்னிப் படர் ஒளி வானவன்
தாள் வைத்த வாறு தரிப்பித்த வாறே.
உரை
   
11கழல் ஆர் கமலத் திருவடி என்னும்
நிழல் சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல் சேரும் அங்கியுள் ஆதிப் பிரானும்
குழல் சேரும் என் உயிர்க் கூடும் குலைத்தே.
உரை
   
12முடி மன்னராய் மூ உலகம் அது ஆள்வர்
அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின்
முடி மன்னராய் நின்ற தேவர்கள் ஈசன்
குடி மன்னராய் குற்றம் அற்று நின்றாரே.
உரை
   
13வைத்தேன் அடிகள் மனத்து உள்ளே நான்
பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு
மெய்த்தேன் அறிந்தேன் அவ் வேதத்தின் அந்தமே.
உரை
   
14அடிசாரலாம் அண்ணல் பாதம் இரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே.
உரை
   
15மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும்
தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும்
சுந்தரம் ஆவதும் தூய் நெறி ஆவதும்
எந்தை பிரான் தன் இணை அடி தானே.
உரை