தொடக்கம் |
|
|
1 | ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை இடும்பையும் இல்லை இராப் பகல் இல்லை படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே. |
|
உரை
|
|
|
|
|
2 | எம் ஆர் உயிரும் இரு நிலத் தோற்றமும் செம் மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திரு அருள் பெற்றவர் அல்லால் இம் மாதவத்தின் இயல்பு அறியாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர் சிறப் பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே. |
|
உரை
|
|
|
|
|
4 | இருந்து வருந்தி எழில் தவம் செய்யும் பெரும் தன்மையாளரைப் பேதிக்க என்றே இருந்து இந்திரன் எவரே வரினும் திருந்து நும் தம் சிந்தை சிவன் அவன் பாலே. |
|
உரை
|
|
|
|
|
5 | கரந்தும் கரந்து இலன் கண்ணுக்கும் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன் அரும்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான் விரைந்து தொழப்படும் வெண்மதி ஆனே. |
|
உரை
|
|
|
|
|
6 | அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்து எழும் பூசல் உட்பட்டார் நடுவே அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே. |
|
உரை
|
|
|
|
|
7 | சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர் மாத்திரைப் போது மறித்து உள்ளே நோக்கு மின் பார்த்த அப் பார்வை பசுமரத்து ஆணி போல் ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே. |
|
உரை
|
|
|
|
|
8 | தவம் வேண்டும் ஞானம் தலைபட வேண்டில் தவம் வேண்டா ஞான சாமாதிகை கூடில் தவம் வேண்டா அச் சக மார்க்கத் தோர்க்குத் தவம் வேண்டா மாற்றம் தனை அறியாரே. |
|
உரை
|
|
|
|