ஆறாம் தந்திரம்

11. ஞான வேடம்

1ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர்
ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே.
உரை
   
2புன் ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை
நல் ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித்
துன் ஞானத்தோர் சமய துரிசு உள்ளோர்
பின் ஞானத்தோர் ஒன்றும் பேச கில்லாரே.
உரை
   
3சிவ ஞானி கட்கும் சிவ யோகி கட்கும்
அவம் ஆன சாதனம் ஆகாது தேரில்
அவம் ஆம் அவர்க்கு அது சாதனம் நான்கும்
உவமானம் இல் பொருள் உள் உறம் ஆமே.
உரை
   
4கத்தித் திரிவர் கழுவடி நாய் போல்
கொத்தித் திரிவர் குரக்களி ஞாளிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.
உரை
   
5அடியார் அவரே அடியார் அலா தார்
அடியாரும் ஆகார் அவ் வேடமும் ஆகார்
அடியார் சிவ ஞானம் ஆனது பெற்றோர்
அடியார் அலாதார் அடியார்கள் அன்றே.
உரை
   
6ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்ல ஆம்
தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே
ஆன அவ்வேடம் அருள் ஞான சாதனம்
ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே.
உரை
   
7ஞானத்தினால் பதம் நண்ணும் சிவ ஞானி
தானத்தில் வைத்த தனி ஆலயத்தன் ஆம்
மோனத்தின் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம்
ஏனைத் தவசி இவன் எனல் ஆகுமே.
உரை
   
8தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும்
தான் உறு சாதக முத்திரை சாத்தலும்
ஏனமும் நந்தி பத முத்தி பெற்றதே.
உரை