தொடக்கம் |
|
|
ஆறாம் தந்திரம் 12. சிவவேடம் |
1 | அருளால் அரனுக்கு அடிமை அது ஆகிப் பொருள் ஆம் தனது உடல் பொன் பதி நாடி இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர் தெருள் ஆம் அடிமைச் சிவ வேடத்தோரே. |
|
உரை
|
|
|
|
|
2 | உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா உடல் கழன்றால் வேடம் உடனே கழலும் உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார் கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று கயல் உற்ற கண்ணியர் கை இணக்கு அற்றுத் தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகிச் செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே. |
|
உரை
|
|
|
|
|
4 | ஓடும் குதிரைக் குசை திண்ணம் பற்றுமின் வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே நாடுமின் நந்தியை நம் பெருமான் தன்னைத் தேடும் இன்பப் பொருள் சென்று எய்தலாமே. |
|
உரை
|
|
|
|