ஏழாம் தந்திரம்

3. பிண்டலிங்கம்

1மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக் கூத்தே.
உரை
   
2உலந்து இலர் பின்னும் உளர் என நிற்பர்
நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்யப்
புலம் தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக
வலம் தரு தேவரை வந்தி செய்யீரே.
உரை
   
3கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர்
தாயில் கொண்டால் போல் தலைவன் என் உள் புக
வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே.
உரை
   
4கோயில் கொண்டான் அடி கொல்லைப் பெருமறை
வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகு இட்டு
வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே.
உரை