தொடக்கம் |
|
|
ஏழாம் தந்திரம் 7. சிவ லிங்கம் |
1 | குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில் கின்ற தீயும் நிரைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே. |
|
உரை
|
|
|
|
|
2 | வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு நிரைத்து வருகங்கை நீர் மலர் ஏந்தி உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்குப் புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஒன்று எனக் கண்டே எம் ஈசன் ஒருவனை நன்று என்று அடி இணை நான் அவனைத் தொழ வென்று ஐம் புலனும் மிகக் கிடந்து இன்பு உற அன்று என் அருள் செய்யும் ஆதிப் பிரானே. |
|
உரை
|
|
|
|
|
4 | மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன் பலம் தரும் ஐம் முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகிப் பலம் தரும் லிங்கம் பரா நந்தி ஆமே. |
|
உரை
|
|
|
|
|
5 | மேவி எழுகின்ற செஞ் சுடர் ஊடு சென்று ஆவி எழும் அளவு அன்றே உடல் உற மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித்து அடக்கில் பரகதி தானே. |
|
உரை
|
|
|
|