ஏழாம் தந்திரம்

13. மகேசுவர பூசை

1பட மாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
பட மாடக் கோயில் பகவற்கு அது ஆமே.
உரை
   
2தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று
எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே.
உரை
   
3மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை
யாத்தனுக்கு ஈந்த அரும் பொருள் ஆனது
மூர்த்திகள் மூவர்க்கு மூ ஏழ் குரவர்க்கும்
தீர்த்தம் அது ஆம் தேர்ந்து கொள்வீரே.
உரை
   
4அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகர் இலை என்பது நிச்சயம் தானே.
உரை
   
5ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர்
கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில்
நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை
பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே.
உரை
   
6ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று
நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ் சடை அண்ணல் இவர் என்று
வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே.
உரை
   
7சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட
பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான் நொந்து நொந்து வரும் அளவும் சொல்லப்
பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே.
உரை
   
8அழி தகவு இல்லா அரன் அடியாரைத்
தொழு தகை ஞாலத்துத் தூங்கு இருள் நீங்கும்
பழுது படா வண்ணம் பண்பனை நாடித்
தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே.
உரை
   
9பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகிப்
புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும்
முக மத்தோடு ஒத்து நின்று ஊழி தோறும் ஊழி
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே.
உரை
   
10தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அரும்தவம்
ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும்
ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ் வினை தீர்க்கும் அப் பொன் உலகம் ஆமே.
உரை