ஏழாம் தந்திரம்

14. அடியார் பெருமை

1திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில்
பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும்
அகக் குறை கேடு இல்லை அவ் உலகுக்கே.
உரை
   
2அவ் உலகத்தே பிறந்த அவ் உடலொடும்
அவ் உலகத்தே அரும் தவம் நாடுவர்
அவ் உலகத்தே அரன் அடி கூடுவர்
அவ் உலகத்தே அருள் பெறுவாரே.
உரை
   
3கொண்ட குறியும் குல வரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண் திசை யோரும் வந்து என் கைத் தலத்தின் உள்
உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே.
உரை
   
4அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசரம் முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே.
உரை
   
5பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணாக்
கண் இன்றிக் காணும் செவி இன்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
உரை
   
6இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர்
புயங்களும் எண்திசை போது பாதாள
மயங்காப் பகிரண்ட மா முடி தானே.
உரை
   
7அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும்
அகம் படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே.
உரை
   
8கழிவு முதலும் காதல் துணையும்
அழிவும் அதாய் நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே.
உரை
   
9என் தாயோ என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில் வண்ணன் ஏர் எழுந்தாயே.
உரை
   
10துணிந்தார் அகம் படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிடல் ஆமே.
உரை
   
11தலை மிசை வானவர் தாள் சடை நந்தி
மிலை மிசை வைத்தனன் மெய்ப் பணி செய்யப்
புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும்
பல மிசை செய்யும் படர் சடை யோனே.
உரை
   
12அறியாப் பருவத்து அரன் அடியாரைக்
குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை
குறியார் சடைமுடி கட்டி நடப்பார்
மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே.
உரை
   
13அவன் பால் அணுகியே அன்பு செய்வார்கள்
சிவன் பால் அணுகுதல் செய்யவும் வல்லன்
அவன் பால் அணுகியே நாடும் அடியார்
இவன் பால் பெருமை இலயம் அதாமே.
உரை
   
14முன் இருந்தார் முழுதும் எண் கணத் தேவர்கள்
எண் இறந்து தன் பால் வருவர் இருநிலத்து
எண் இரு நாலு திசை அந்தரம் ஒக்கப்
பன்னிரு காதம் பதம் செய்யும் பாரே.
உரை
   
15சிவ யோகிஞானி செறிந்த அத் தேசம்
அவ யோகம் இன்றி அறிவோர் உண்டாகும்
நவ யோகம் கை கூடும் நல் இயல் காணும்
பவ யோகம் இன்றிப் பரலோகம் ஆமே.
உரை
   
16மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன்
மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன்
மேல் உணர்வார் மிகுஞாலத்து அமரர்கள்
மேல் உணர்வார் சிவன் மெய் அடியார்களே.
உரை