ஏழாம் தந்திரம்

16. பிட்சா விதி

1விச்சுக் கலம் உண்டு வேலிச் செய் ஒன்று உண்டு
உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது
அச்சம் கெட்டு அச் செய் அறுத்து உண்ண மாட்டாதார்
இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே.
உரை
   
2பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை தன்னில்
பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்யப்
பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டிப்
பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே.
உரை
   
3பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை
இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார்
இரந்து உண்டு தன்கழல் எட்டச் செய்தானே.
உரை
   
4வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன்
தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொர இருந்தான் புகலே புகல் ஆக
வர இருந்தால் அறியான் என்பது ஆமே.
உரை
   
5அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவன் அடியார் சரீரத்து இடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப் படு வாரே.
உரை
   
6மெய் அக ஞானம் மிகத்ம் தெளிந்தார்களும்
கை அக நீண்டார் கடைத் தலைக்கே செல்வர்
ஐயம் புகாமல் இருந்த தவசியார்
வையகம் எல்லாம் வர இருந்தாரே.
உரை