ஏழாம் தந்திரம்

17. முத்திரை பேதம்

1நால் ஏழு மாறவே நண்ணிய முத்திரை
பால் ஆன மோன மொழியில் பதிவித்து
மேல் ஆன நந்தி திருவடி மீது உய்யக்
கோலா கலம் கெட்டுக் கூடு நல் முத்தியே.
உரை
   
2துரியம் கண் மூன்றும் சொருகின் ஆகி
அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே.
உரை
   
3சாம்பவி நந்தி தன் அருள் பார்வை ஆம்
ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை
ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம் பயில் நாதன் மெய்ஞ் ஞான முத்திரையே.
உரை
   
4தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால்
ஏனைச் சிவம் ஆம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.
உரை
   
5வாக்கும் மனமும் இரண்டு மவுனம் ஆம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கை ஆம்
வாக்கும் மனமும் மவுனமும் ஆம் சுத்தரே
ஆக்கும் அச் சுத்தத்தை யார் அறிவார்களே.
உரை
   
6யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தி ஆம்
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்கால்
ஆகத் தகு வேத கேசரி சாம்பவி
யோகத்துக் கேசரி யோக முத்திரையே.
உரை
   
7யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை
போகி தன் புத்தி புருடார்த்த நல்நெறி
ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை
ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே.
உரை
   
8துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கம் ஆம்
அவா அறு ஈர் ஐ வகை அங்கம் ஆறும்
தவா அறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவா அகமோடு உன்ன நல் சுத்த சைவமே.
உரை
   
9மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்கு முத்திரை கண்ட சமயமே.
உரை
   
10தூ நெறி கண்ட சுவடு நடு எழும்
பூ நெறி கண்டது பொன் அகம் ஆய் நிற்கும்
மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி
நீ நெறி கண்டுள நின் மலன் ஆமே.
உரை