| தொடக்கம் |
|
|
|
|
| ஏழாம் தந்திரம் 24. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை |
| 1 | ஆக மதத்தன ஐந்து களிறு உள ஆக மதத்து அறியோடு அணை கின்றில பாகனும் மெய்த்தவை தாமும் இளைத்த பின் யோகு திருந்துதல் ஒன்று அறியோமே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 2 | கருத்தின் நல் நூல் கற்றுக் கால் கொத்திப் பாகன் திருத்தலும் பாய் மாத் திகைத்து அன்றிப் பாயா எருத்து உறவே இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழி நடவாதே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 3 | புலம் ஐந்தும் புள் ஐந்து புள் சென்று மேயும் நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலம் வந்து போம்வழி ஒன்பது தானே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 4 | அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும் போய் மேய்ந்ததும் அஞ்சுகமே புகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்து இட்டால் எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 5 | ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள் ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில் ஐவர்க்கு இறை இறுத்து ஆற்ற கிலோமே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 6 | சொல்ல கில்லேன் சுடர்ச் சோதியை நாள் தொறும் சொல்ல கில்லேன் திரு மங்கையும் அங்கு உள வெல்ல கில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும் கொல்ல நின்று ஓடும் குதிரை ஒத்தேனே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 7 | எண் இலி இல்லி உடைத்து அவ் இருட்டு அறை எண் இலி இல்லியோடு ஏகில் பிழைதரும் எண் இலி இல்லியோடு ஏகாமை காக்கு மேல் எண் இலி இல்லது ஓர் இன்பம் அது ஆமே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 8 | விதியின் பெருவலி வேலை சூழ் வையம் துதியின் பெருவலி தொல் வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே. |
|
உரை
|
| |
|
|